News August 9, 2025
போலி வாக்காளர்களால் திமுக வெற்றி: இபிஎஸ் சாடல்

போலி வாக்காளர்களால் தான் சென்னை மாநகராட்சியில் திமுக வெற்றி பெறுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்து கொடுத்ததாகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News August 9, 2025
11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: IMD

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்க மக்களே..!
News August 9, 2025
யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள்…

நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!
News August 9, 2025
2025 வருமான வரி மசோதா வாபஸ்

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை, நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். அதேநேரம், வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில் ஆக.11-ல் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. TDS, TCS விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.