News March 24, 2025
DMK vs ADMK: அன்று நண்பர்கள் இன்று எதிரிகள்.. 22 பேர் பலி

மதுரையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஆம்! சினிமாவில் வரும் காட்சிகள் போல், நண்பர்களாக இருந்த குருசாமி திமுகவிலும், ராஜபாண்டி அதிமுகவிலும் 22 ஆண்டுகளுக்கு முன் இணைந்தனர். அதன்பின் நண்பர்களாக இருந்த இரு குடும்பமும் அரசியல் எதிரியாக மாறியுள்ளன. அப்படி, கடந்த 2003 முதல் 2025 வரை இருதரப்பிலும் சுமார் 22 பேர் அரசியலுக்காக பலியாகியுள்ளனர்.
Similar News
News August 22, 2025
உதயநிதியால் முதல்வராக முடியாது: அமித்ஷா

CM ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான், ஆனால் ஒருநாளும் உதயநிதியை முதல்வராக்க முடியாது என அமித்ஷா விமர்சித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவரும் திமுக ஆட்சிதான் எனக் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல் என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.
News August 22, 2025
மகளிர் உலகக் கோப்பை: பெங்களூரு போட்டிகள் மாற்றம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் நவி மும்பையின் DY படில் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 3 லீக், அரையிறுதி & இறுதிப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. முன்னதாக, RCB வெற்றிப் பேரணியின்போது 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கர்நாடக பேரவையில் கூட்ட கட்டுப்பாடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
News August 22, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிய (ஜூலை 15) முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி விவரங்கள் வெளியாகும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிதாக திட்டத்தில் இணைபவர்களுக்கு பணம் வரவு வைப்பது தொடர்பான அறிவிப்பை செப். 15-ல் அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.