News August 17, 2025
ED-யை கண்டு அச்சத்தில் திமுக அமைச்சர்கள்: செல்லூர் ராஜு

திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
Similar News
News August 17, 2025
BCCIக்கு பும்ரா எழுதிய முக்கிய கடிதம்!

செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்டு விடும். ரசிகர்களிடையே பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், அவர் BCCI-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில், ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.
News August 17, 2025
ஜப்பான், இந்தோனேசியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்!

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2:43 மணிக்கு ஜப்பானில் ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தகனாபே என்ற நகரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்தில், 10 கிமீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ககோஷிமாவின் நாஸ் பகுதியிலும் ரிக்டர் அளவில் 3.0 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தோனேசியா அருகிலும் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
News August 17, 2025
துப்பாக்கி 2 கதை இருக்கு: AR முருகதாஸ்

தனது படங்களில், ‘துப்பாக்கி’ படத்தின் பார்ட் 2-வை மட்டுமே எடுக்க முடியும் என AR முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், அப்படத்தில் விஜய் ஆர்மிக்கு மீண்டும் செல்வார், அப்போது அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் (அ) இங்கு மீண்டும் வந்து வேறு ஒரு சம்பவத்தைக் கொண்டு கதையைத் தொடரலாம் என்றார். துப்பாக்கி 2 ஓகே ஆகுமா?