News August 12, 2025
விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
போலி சாமியார் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.
News August 12, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

* நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
*பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தேன், ஆனால் ‘விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஒரு சாம்பியனாக வாழ்’ என கூறிக்கொண்டேன் .
* நான் எங்கே போகிறேன் என தெரியும், நான் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நான் இருக்க வேண்டியதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று சுதந்திரமாக இருக்கிறேன்.
News August 12, 2025
IPL அணி வாங்கும் எண்ணம்? சல்மான் கான் பதில்

ISPL என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்ற போது, IPL அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2008-ம் ஆண்டு IPL அணி வாங்குவதற்கு அழைப்பு வந்தது என்றும், ஆனால் அதனை அந்த சமயத்தில் ஏற்கவில்லை என்றார். அதை நினைத்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.