News March 22, 2025
திமுக அரசு திணறி வருகிறது: அன்புமணி

கொலை, கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 6,597 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் உண்மைக்கு மாறாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், கொலைகள் குறைந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 24, 2025
காலையில் பெண்கள் பால் வாங்க வருவதில்லை

அதிகாலையில் பால் வாங்க வரும் பெண்களுக்கு ‘கல்ப்ரிட்ஸ்’ தொல்லை உள்ளதால், பால் விற்பனை நேரம் மாற்றப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், பெண்கள் அதிகாலை நேரத்தில், ஆவின் பூத்திற்கு பால் வாங்க வருவது அபூர்வமானது. இதை ராஜகண்ணப்பன் அறியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, சரியான தகவல்களை ஆராய்ந்து, அவர் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.
News March 24, 2025
தீபக் சஹாரை பேட்டால் அடித்த தோனி

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல என்கிற பழமொழிக்கு ஏற்ப, CSKக்கு எதிராக MI வீரர் தீபக் சஹார் பேட்டிங்கில் பொளந்து கட்டினார். என்னையவா ரீட்டைன் பண்ணல என்ற கோபத்தில் அடித்தது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு ஷாட்டும். இருப்பினும் CSK வெற்றி பெற்ற பின், MI வீரர்களுக்கு கை கொடுத்த தோனி, நீ வேறு அணிக்கு போனாலும் என்னுடைய வளர்ப்புதான் என்பது போல, தீபக் சஹாரை பேட்டால் பின்னால் அடித்து கிண்டல் செய்தார்.
News March 24, 2025
ADMK – TVK கூட்டணி அமைந்தால் ஓட்டு கிடைக்குமா?

நடிகராக இருந்துவிட்டு உடனே CM-ஆகி விட முடியாது என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். MGR, NTR-க்கு நடந்தது போல எல்லாருக்கும் நடக்காது, எல்லோரும் எதிரியாவார்கள், தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். ஆகவே முதலில் விஜய் நிலைத்து நிற்க வேண்டும் ன ஆலோசனைக் கூறிய அவர், ADMK – TVK கூட்டணியை அரசியல் கணக்குக்காக உருவாக்கினால், இரு பக்கமும் ஓட்டு பரிமாற்றம் நடக்குமா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.