News February 24, 2025
திமுக அரசுக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

TNக்கு பல திட்டங்களை வழங்கிய பிரதமர் மோடியை வரவேண்டாம் என்று சொல்ல திமுக அரசுக்கு தகுதியில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். திமுகவில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை CBSE பள்ளிகளை திறந்து ஹிந்தி கற்றுக் கொடுப்பதாகவும், அனைத்து CBSE பள்ளிகளை மூட தமிழக அரசு ஆணையிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளால் அரசு பள்ளிகள் குறைந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News February 24, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தைகள் சரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. காலை 10 மணி அளவில் சென்செக்ஸ் 753 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 233 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஐடி துறைகளின் பங்குகள் 2% அளவுக்கு வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின. இந்திய பொருட்கள் மீது டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல் ஆகியவை பங்குச் சந்தைகள் வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
News February 24, 2025
10வது போதும்! மத்திய அரசில் 21,413 காலிப்பணியிடங்கள்

தபால் அலுவலகங்களில் காலியாக இருக்கும் 21,413 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. MTS Postman, Mailguard Postக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், Postal Assistant, Sorting Assistantக்கு டிகிரி, கணினி அறிவும் வேண்டும். 18 – 32 வயதுடையோர் பிப். 1 முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின்றி மெரிட் அடிப்படையில் தேர்வு நடைபெறும். சம்பளம் ₹29,380 வரை. <
News February 24, 2025
யார் கோழை? அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம். மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் CM ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். எங்கள் முதல்வர் இரும்பு மனிதர். கோழை என கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் என அவர் அன்புமணியை விமர்சித்துள்ளார்.