News March 13, 2025
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசு: இபிஎஸ்

அவிநாசி தம்பதியினர் படுகொலையை சுட்டிக்காட்டி, ‘வருமுன் காப்பதும் இல்லை – பட்டும் திருந்துவதும் இல்லை’ என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு என சாடிய அவர், சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்துவிட முடியாது என்று ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
Similar News
News March 14, 2025
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில், ADMK எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் காலை 8.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலாகிறது. அதன் பின்னர், மாலை 6.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.
News March 14, 2025
பராசக்தி படத்தில் பாசில் ஜோசஃப்?

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பில், மலையாள நடிகர் பாசில் ஜோசஃப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொழும்புவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் உள்ள நிலையில், பாசிலும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
News March 14, 2025
நாளை வங்கிக் கணக்கில் ₹1,000

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்றைய தமிழக பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, ₹1,000ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.