News October 21, 2025

உழவர்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி

image

பருவமழை காரணமாக நெல் கொள்முதலை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியில் 70% அறுவடை முடிந்தும், 60% நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், நெல் ஈரப்பத வரம்பை 25%ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் உழவர்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக சாடியுள்ளார்.

Similar News

News October 22, 2025

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

image

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. *உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.

News October 22, 2025

NATIONAL ROUNDUP: பிஹாரில் 1,314 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

▶சபரிமலை கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று சாமி தரிசனம் ▶பிஹார் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ▶பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தகவல் ▶கேரளாவில் வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

News October 22, 2025

இந்தியா – வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் ரத்தா?

image

வங்கதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த பிறகு, இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது எனவும் வெளியுறத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!