News February 24, 2025
திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம்

திமுகவில் கடந்த சில நாட்களாக மாவட்ட பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவால், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மதுரா, தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி என மேற்கு மாவட்டங்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக பேசப்படுகிறது.
Similar News
News February 24, 2025
பங்குச்சந்தைகள் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்!

இந்தியப் பங்குச்சந்தைகளின் தொடர் வீழ்ச்சிக்கு 3 காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். முதலாவதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை தொடர்ந்து விற்பது, இரண்டாவதாக ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திப்பது வீழ்ச்சிக்கு காரணமாக அறியப்படுகிறது. மூன்றாவது, அமெரிக்க பண வீக்கம், பிரிக்ஸ் நாடுகள் மீதான அதிபர் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் பங்குச்சந்தைக்கு அதிக அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.
News February 24, 2025
ஒற்றைத் தலைமையே தொடர் தோல்விக்கு காரணம்: OPS

அதிமுகவின் தொடர் தோல்விக்கு ஒற்றைத் தலைமையே காரணம் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதாக இபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடியுள்ளார்.
News February 24, 2025
ராஜகோபுரத்தில் 40 அடி உயர வேல்: பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி 137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜகோபுரத்தில் 40 அடி உயர பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.