News March 18, 2024

வேலூரில் திமுக மீண்டும் போட்டி

image

2024-மக்கள்வை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வேலூரில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 6, 2025

வேலூர்: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

வேலூர்: துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி!

image

வேலூர்: தேவரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமு (65), கடந்த 25ம் தேதி, வீட்டின் பின்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த போது, திடீரென அவருடைய வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

வேலூர்: சிறுமி 3 மாதம் கர்ப்பம்.. வாலிபர் மீது போக்சோ!

image

வேலூர்: காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவருக்கும், வேளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின்னர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

error: Content is protected !!