News January 12, 2025
17ஆம் தேதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வருகிற 17ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 15, 2025
இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது: ஸ்டாலின்

வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தங்களை நீக்கும் ஒரு முக்கிய நகர்வாக <<17714489>>உச்சநீதிமன்ற உத்தரவு <<>>அமைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, திமுக இதனை எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளை SC பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக CM கூறினார்.
News September 15, 2025
இடது கையில் Watch கட்டுவது ஏன் தெரியுமா?

யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என்றாலும் தானாகவே வாட்ச்சை இடது கையில் கட்டும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பெருவாரியான மக்கள் Right Handers என்பதால், அன்றாட வேலைகளை செய்யும்போது இடையூறு ஏற்படாமல் இருக்க Watch-ஐ இடது கையில் கட்டுகின்றனர். இதனால் வாட்ச் சேதமாவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. இவர்களுக்காக தான் வாட்ச்களின் பொத்தான்களை பெரும்பாலான கம்பெனிகள் வலது பக்கத்தில் வைக்கிறதாம்.
News September 15, 2025
BREAKING: நாய் கடித்து 22 பேர் மரணம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

நாய்க்கடி தொடர்பான அதிர்ச்சிக்குரிய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்தாண்டில் 8 மாதங்களில் மட்டும் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாய் கடியை தடுப்பதற்கும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.