News May 7, 2025
தேமுதிக மாநாடு.. தேதி குறித்த பிரேமலதா!

தேமுதிக முக்கிய பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ள பிரேமலதா, கடலூரில் ஜன.9-ல் கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போதே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மாநாட்டின் மூலம் கட்சியின் பலத்தை நிரூபித்த பிறகே, கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கூடுதல் சீட்களை பெற பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 20, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

கரூர் துயருக்கு பிறகு, மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4-ல் சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தொடங்கவுள்ள பரப்புரை விஜய்யின் அரசியலை தீவிரப்படுத்துமா?
News November 20, 2025
‘மருதநாயகம்’ அப்டேட் கொடுத்த கமல்!

கமல்ஹாசனின் கனவு திரைப்படம் ‘மருதநாயகம்’. அந்த காலகட்டத்திலேயே மிக அதிக பொருள்செலவில் படப்பிடிப்பு தொடங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த ஆசை தனக்கும் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் ‘மருதநாயகம்’ சாத்தியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
சபரிமலை ஸ்பாட் புக்கிங்: இனி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

சபரிமலையில் நவ.24 வரை ஸ்பாட் புக்கிங் மூலம் தினம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கேரள ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பம்பா, எருமேலி, செங்கன்னூரில் செயல்பட்டு வந்த ஸ்பாட் புக்கிங் மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், <<18327487>>நிலக்கல்<<>>, வண்டிப்பெரியாரில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


