News October 3, 2025
தீபாவளிக்காக முன்கூட்டியே வரும் ரேஷன் பொருள்கள்!

தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் பச்சரிசி, பாமாயிலுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அக்.10-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் பொருள்களையும் ஒரே கட்டமாக விநியோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2026
ஏப்ரல் 2: வரலாற்றில் இன்று

*உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் *1881 – இந்திய விடுதலைப் போராட்டக்காரர் வ.வே.சு.ஐயர் பிறந்தநாள் *1884 – தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பிறந்தநாள் *1924 – நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பிறந்தநாள் *1984 – விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றார் *2011- 28 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது
News April 2, 2026
ஆண்களை திருமண வலையில் வீழ்த்திய பலே கில்லாடி

ராஜஸ்தானில் திருமண ஆசை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய ரேகா கவுர் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. திருமணம் முடிந்தவுடன் மணமகனின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பிப்பதே அவரது வாடிக்கையாகும். இந்நிலையில் விக்ரம்ஜீத்தை மணந்த ரேகா கவுர், அவருடைய வீட்டில் இருந்து தப்பிக்க மாமியாருக்கு விஷம் வைத்துள்ளார். முதலில் ரேகா கவுர் காணாமல் போனதாக எண்ணிய விக்ரம்ஜீத், பின்னர் உண்மையை அறிந்து மனமுடைந்தார்.
News April 2, 2026
அதிமுகவுக்கு தாவிய தவெகவினர்

தவெகவின் தலைமை மீதான அதிருப்தியில் அக்கட்சியை சேர்ந்த 25-க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொருளாளா் ADS சுரேஷ், துணை செயலாளர் சசிகலா, உள்ளிட்டோர் தவெகவில் இருந்து விலகி, ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மா.செ., சுகுமார் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில், தவெகவினர் அதிமுகவில் இணைந்ததால் தவெக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.


