News October 18, 2025
தீபாவளியும் புது டிரெஸ்ஸும்..

இப்போ போரடிச்சா ஷாப்பிங் போய், துணி வாங்குறோம். ஆனா, ஒரு காலத்துல தீபாவளி, பொங்கல் வந்தா மட்டும்தான் புது துணி. அதுக்காக வருஷமெல்லாம் வெயிட்டிங்கில் இருப்போம். வளருற பசங்களா இருந்தா அந்த துணியும் கொஞ்சம் லூசா தான் கிடைக்கும். தீபாவளிக்கு 2 நாள் முன்ன வீட்டுக்கு டிரெஸ் வந்தாலும், அத போட்டு பாக்க முடியாது. தொட்டு பாத்துட்டே உக்கார்ந்துட்டு இருக்கணும். உங்க வாழ்க்கை’ல மறக்க முடியாத தீபாவளி எது, ஏன்?
Similar News
News October 18, 2025
அவைக்குறிப்பில் தீபாவளி வாழ்த்து நீக்கம்: வானதி

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து கூற மறுத்தவர்கள், ‘தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்’ என்று கேட்கக்கூட அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தீபாவளி வாழ்த்து கூறுங்கள் என்று பேசியதை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர் என்றார். இதைவிட பாசிசம் வேறேதும் இருக்க முடியாது என்றும் விமர்சித்தார். திமுக தரப்பில் தீபாவளி வாழ்த்து கூறாதது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
News October 18, 2025
பங்கு சந்தையில் AI அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!

AI துறையில் உள்ள நிறுவன பங்குகளின் விலை மிக அதிகமாக ஏறுவதால், உலக பங்கு சந்தையில் விரைவில் ஒரு பெரிய சரிவு வரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில Tech நிறுவன பங்குகள் அதிக மதிப்பில் இருப்பது, சந்தை சில நிறுவனங்களை சார்ந்து இயங்குவது, ஆட்டோமேட்டிக் வர்த்தகம் வணிகத்தை வீழ்ச்சியடைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பல துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
News October 18, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக மாறியது

தீபாவளியையொட்டி, கோயம்பேடு, தோவாளை, மாட்டுத்தாவணி உள்ளிட்ட மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பிறகே விலை சரியும் வணிகர்கள் கூறுகின்றனர். தங்கம் மட்டுமல்ல, பூக்கள் கூட வாங்க முடியாது போலயே..!