News April 1, 2025
பிளவுவாத அரசியல்: ஸ்டாலினை விமர்சித்த யோகி

மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் நிலையில், TN CM ஸ்டாலின் மீது UP CM யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதால் மொழி அடிப்படையில் பிளவை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், அவர் குறுகிய அரசியல் செய்வதாகவும் யோகி சாடியுள்ளார். இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 27, 2025
ஜாக் மாவின் பொன்மொழிகள்

✪ கனவுகளின் அழகை நம்புபவர்களுக்குதான் எதிர்காலம் சொந்தம்
✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு
✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும்
✪ யோசனை எதுவென்பது முக்கியமல்ல; அது செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம்
✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.
News August 27, 2025
மேற்கு வங்க மக்கள் திருடர்களா? மம்தா பதிலடி

மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.
News August 27, 2025
புஜாராவின் ஆட்டத்தை சிலாகித்த விராட் கோலி

இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த புஜாரா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், புஜாராவிற்கு தனது நன்றியை விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அதில் நான்காவது இடத்துக்கான எனது வேலையை எளிதாக்கியதற்கு நன்றி என்றும் உங்களது கிரிக்கெட் பயணம் அருமையாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். உங்களது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.