News March 22, 2025
பன்முகத்தன்மையே நாட்டின் பலம்: பினராயி விஜயன்

மாநிலங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். பன்முகத்தன்மையே நாட்டின் பலம். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவசியம் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 14, 2025
Sports Roundup: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

*ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 80Kg எடைப்பிரிவில் நுபுர் ஷியோரன் வெள்ளி வென்றார். *உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இஷா சிங் தங்கம் வென்றார். *18 வயதுக்கு உட்பட்ட ஆசிய ரக்பியில் இந்தியா 24-5 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. * இந்தியா Vs ஆஸி. மகளிர் இடையே முதல் ODI இன்று சண்டிகரில் நடைபெறுகிறது.
News September 14, 2025
தினமும் சாமி கும்பிடும்போது.. முழு பலன் பெற..

கடவுளை தூய மனதுடன் வழிபடவோ, வீட்டில் பூஜை செய்ய முடியவில்லை என்றாலோ அதற்கு கர்ம வினைகளே காரணம். இவற்றை மாற்ற வேண்டும் என நினைத்தால், இந்த 3 விஷயங்களைக் கண்டிப்பாக செய்யுங்கள். இறைவனை வழிபடும்போது கைகளால் பூக்களைத் தூவி, வாய் முழுக்க கடவுள் மந்திரங்களை ஓதி மனதை ஒருநிலைப்படுத்தி வழிபட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. Share it to friends.
News September 14, 2025
கோயில் பணம் எங்கு செல்கிறது: அரசு விளக்கம்

கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில்களுக்கே செலவிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ₹445 கோடி கோயில் உண்டியல் பணத்தை பிற மத வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு அரசு செலவு செய்வதாக செய்தி பரவியது. இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், கோயில் உண்டியல் பணத்தை இந்து சமயம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே அரசு செலவு செய்வதாகவும் கூறியுள்ளது.