News August 5, 2024

நெல்லையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்

image

நெல்லை மாவட்டம் பழவூரில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியினை பழவூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 13, 2026

நெல்லை: GH இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

image

பாளை மகாராஜா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (57). இவர் நெல்லை GH-ல் எலக்ட்ரிக் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிந்து பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

திருநெல்வேலி: பெற்ற குழந்தையை GH-ல் விட்டு சென்ற தாய்

image

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரேணுகா என்பவரால் பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டு பின்பு அவர் மருத்துவமனையிலேயே அக்குழந்தையை விட்டுச் சென்று விட்டார். அக்குழந்தையை குழந்தை உதவி மைய பணியாளர் மூலமாக மீட்டு குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைக்கு குழந்தை நலக்குழுவால் கயல்விழி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார்.

News March 13, 2026

நெல்லை மாவட்ட காவல்துறையின் புதிய திட்டம்

image

நெல்லை மாவட்ட எஸ்பி டாக்டர் வி.பிரசண்ண குமார் ஐபிஎஸ் “மக்களைத் தேடி மாவட்ட காவல்” திட்டத்தை அவர் மேலத்தாழையூத்தில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனி காவலர். 3 மாதங்களில் 100% சிசிடிவி கண்காணிப்பு இலக்கு. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க: 94981 01740 என்ற புதிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!