News October 30, 2025
விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
Similar News
News October 30, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1800 குறைந்து ₹88,800-க்கும், கிராமுக்கு ₹225 குறைந்து ₹11,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News October 30, 2025
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…

4,662 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்று, அதன் முடிவுகள் அக்.22-ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
ஃபிலிம்பேர் விருது சர்ச்சை: அபிஷேக் பச்சன் வேதனை

’I want to talk’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை நடிகர் அபிஷேக் பச்சன் வென்றிருந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்திதான் அவர் விருதை வாங்கினார் என SM-ல் பலர் விமர்சித்தனர். இந்நிலையில், எந்த விருதையும் பிஆர் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், உங்களை அமைதிப்படுத்த இன்னும் கடினமாக உழைப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.


