News March 18, 2024
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
12-வது போதும்.. மத்திய அரசில் 208 காலியிடங்கள்!

✱தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ✱வயது: 18- 21 ✱சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ✱தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ✱விண்ணப்பிக்க <
News December 13, 2025
சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News December 13, 2025
பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

ராமதாஸ், அன்புமணி என 2 தரப்புகளிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க, இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புகிறதாம். இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50%-ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75%-ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிக்கிறாராம்.


