News March 18, 2024
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக: ராகுல்

நாடு முழுவதும் ‘ஊழல்’ பாஜக கட்சி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆணவம் எனும் விஷம் பாஜக அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் புள்ளி விவரங்களாக மட்டுமே இருப்பதாக கூறிய அவர், மோடிஜியின் ‘டபுள் இன்ஜின் ஆட்சி’ பில்லியனர்களுக்காக மட்டுமே இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
மக்கள் நாயகன் காலமானார்

நாட்டு விடுதலைக்காக போராடிய மக்கள் நாயகனின் இறுதி மூச்சு இன்று அடங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதி மா.வன்னிக்காளை(92) உடல்நலக் குறைவால் காலமானார். விடுதலைக்கு பிறகும் பெண் குழந்தைகளின் கல்விக்கான சேவையில் ஈடுபட்டுவந்த அவர், அப்பணிக்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதினை 1991-ல் பெற்றார். மக்கள் பணிக்காக சிறந்த காந்தியவாதி உள்பட பல விருதுகளை வென்ற இந்த நாயகன் இப்போது நம்முடன் இல்லை. RIP
News January 9, 2026
பராசக்தியில் ஹிந்தி திணிப்பு வசனம் மாற்றம்

‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், சுமார் 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிரபல முழக்கமான, ‘இங்கு அண்ணாதுரை தான் ஆள்கிறான்’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்பதற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி திணிப்பு தொடர்பான வசனங்களும் மியூட் செய்யப்பட்டுள்ளன.


