News March 18, 2024

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 24, 2025

மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE THIS.

News October 24, 2025

மழையை எதிர்கொள்ள தயார்: கே.என்.நேரு

image

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த அவர், தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். CM உத்தரவின் பேரில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

News October 24, 2025

Dejavu ஏற்படுவது எப்படி தெரியுமா?

image

புதிதாக நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது தான் Dejavu. இது மூளையில் ஏற்படும் சிறிய சிக்னல் பிழையால் நடக்கிறது. அதாவது, புதிதாக ஒரு சம்பவம் நடக்கும்போது அதை hippocampus பகுதி Store செய்து வைக்கும். அப்போது உங்கள் மூளை, இதை ஏற்கனவே பார்த்ததுபோல தவறான சிக்னல் அனுப்புவதால் hippocampus பகுதி குழம்புகிறது. இதனால்தான் உங்களுக்கு Dejavu ஏற்படுகிறது. SHARE.

error: Content is protected !!