News April 12, 2024
நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்

தமிழகத்தில் நாளைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்றார்.
Similar News
News July 6, 2025
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கமா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்ததால் அதிமுகவிலிருந்து <<16962233>>அன்வர் ராஜா<<>>வை இபிஎஸ் நீக்கினார். அதன்பின் இபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அண்மையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததை கடுமையாக சாடியிருக்கிறார். இதனால், அவர் மீது இபிஎஸ் நடவடிக்கை ( கட்சியில் இருந்து நீக்கம்) எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News July 6, 2025
பாஜகவின் திட்டம் பலிக்காது: அன்வர் ராஜா பாய்ச்சல்

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது எனவும் சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார். இது, கூட்டணியிலிருந்து பாஜகவை கைகழுவும் முடிவோ? என பலரும் கருத்து கூறுகின்றனர்.
News July 6, 2025
உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★<