News September 2, 2025
ஊழல் பணத்தை பிரிப்பதில் திமுகவில் தகராறு: EPS

தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தை பிரிப்பதில் திமுகவினரிடையே தகராறு ஏற்படுவதாக EPS கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மதுரையில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மக்களின் பிரச்னைகளை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளதாக சாடினார்.
Similar News
News September 2, 2025
தங்கம் விலை ஒரே வாரத்தில் ₹3,360 உயர்வு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய Record-ஐ படைத்துள்ளது. கடந்த 8 நாள்களில் ஒருநாள் கூட தங்கம் விலை குறையவில்லை. கடந்த 25-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹74,440-க்கு விற்பனையான நிலையில், இதுவரை சுமார் ₹3,360 வரை உயர்ந்து, இன்று 77,800-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கடந்த 5 நாள்களில் கிலோவுக்கு ₹7 ஆயிரம் அதிகரித்துள்ளது.
News September 2, 2025
தமிழகத்தில் தொடங்கியது தேர்தல் ஃபீவர்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. இதற்காக முதற்கட்டமாக, பெரம்பலூருக்கு 180 மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களை பெரம்பலூர் ஆட்சியர் மிருணாளினி ஆய்வுசெய்தார். இதன்பிறகு வாக்கு இயந்திரங்கள், கிடங்கில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
News September 2, 2025
BJP தலைவராக இருக்க இதுதான் தகுதியா? TRB ராஜா காட்டம்

CM ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து <<17586070>>நயினார் நாகேந்திரன்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா என அமைச்சர் TRB ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உள்ள தமிழகம் குறித்த உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுங்கள் எனவும் கூறியுள்ளார்.