News June 3, 2024
தேர்தல் ஆணையத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தபால் வாக்குகள் தொடர்பான ஆந்திர தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தபால் வாக்கு படிவத்தில் சான்றளிக்கும் அதிகாரியின் பதவி குறிப்பிடாமல், கையொப்பம் மட்டும் இருந்தாலே, அந்த வாக்கு செல்லும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது மோசடிக்கு வித்திடும் என ஒய்எஸ்ஆர் காங்., வழக்கு தொடுத்திருந்தது.
Similar News
News December 1, 2025
அரை நாள் விடுமுறையா? காலையில் இருந்து விடாத மழை

காலையில் இருந்து தற்போது வரை சென்னையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 1, 2025
அனைவரையும் சமமாக நடத்துங்கள்: திருச்சி சிவா

ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு இடமளிக்க வேண்டும் என்று CPR-யிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, ‘அனைவரையும் சமமாக நடத்தும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் நீங்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
News December 1, 2025
எந்த மாநில MLA-க்கள் அதிக சொத்து உடையவர்கள்!

தலைப்பே ஆர்வத்தை கிளப்புகிறதா! நாட்டில் எந்த மாநில MLA-க்கள் அதிக சொத்து உடையவர்களாக உள்ளார்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பட்டியல், தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்க இந்த லிஸ்ட்டில் எந்த மாநில MLA-க்கள் முதல் இடத்தில் இருப்பார்கள் என நினைத்தீர்கள்?


