News March 16, 2024
திருச்சியில் பெண்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி

உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
திருச்சி: வாய்க்காலில் மிதந்த பிணம்

காட்டுப்புத்தூரை அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (80). விவ–சாயி. இவர் சம்பவத்தன்று மஞ்சமேடு கிராமத்தில் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள கொங்க ஓடை வாய்க்காலில் பிச்சைமுத்து மரமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 2, 2026
திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருச்சி பீமநகர் கொச தெருவை சேர்ந்தவர் சைமன் கிஷோர் (23). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி செம்மொழி ரயிலில் சென்று கொண்டிருந்த அஞ்சலி (31) என்ற பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சைமன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News January 1, 2026
திருச்சி: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

திருச்சியில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்பு
2. முசிறி வருவாய் கோட்டாட்சியர் அரமுத தேவசேனா விபத்தில் பலி
3. தவெக தலைவர் விஜய் பரப்புரை
4. சிறுகனூர் அருகே இளம்பெண் எரித்து கொலை
5. புத்தூர் பகுதியில் சிவாஜி சிலை திறப்பு
6. திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக்கொலை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.


