News June 27, 2024

கீழடியில் ‘தா’ எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

image

கீழடி கொந்தகையில் ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 செ.மீ., அகலமும், 4 செ.மீ., உயரமும் கொண்டுள்ள அந்த பானை ஓட்டில், 2ஆம் எழுத்து இருப்பதற்கான தடயமும் இருக்கலாமெனக் கூறப்படுகிறது. அகழாய்வு பணிகள் நடைபெறுவதால், பாசி, கண்ணாடி மணிகளைத் தொடர்ந்து மேலும் பல அரிய பொருள்கள் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Similar News

News December 30, 2025

பொங்கல் பரிசுத் தொகை.. புதிய அறிவிப்பு வெளியானது

image

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று, e-KYC சரிபார்ப்பை முடிங்க. SHARE.

News December 30, 2025

நாளையே கடைசி.. பான் கார்டு வேலை செய்யாது!

image

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

News December 30, 2025

EPS-க்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

image

சிறுவர்கள் கையில் கூட போதைப்பொருள் இருப்பதாக <<18703918>>EPS<<>> விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சு., EPS முதல்வராக இருந்தபோது தான் TN-ல் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி, தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். எங்கேயாவது விற்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சியினர் கூறினால், நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!