News June 27, 2024
கீழடியில் ‘தா’ எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

கீழடி கொந்தகையில் ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 செ.மீ., அகலமும், 4 செ.மீ., உயரமும் கொண்டுள்ள அந்த பானை ஓட்டில், 2ஆம் எழுத்து இருப்பதற்கான தடயமும் இருக்கலாமெனக் கூறப்படுகிறது. அகழாய்வு பணிகள் நடைபெறுவதால், பாசி, கண்ணாடி மணிகளைத் தொடர்ந்து மேலும் பல அரிய பொருள்கள் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 3, 2025
ஏக்கருக்கு ₹40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹8,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கு விவசாயிகள் இதுவரை ஏக்கருக்கு ₹30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில், அரசின் நிவாரணம் போதாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 3, 2025
பேய் மழை வெளுக்கும்.. 25 மாவட்டங்களில் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தி.மலை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
தி.மலையில் தீபம் ஏற்ற உரிமை இவர்களுக்கு மட்டுமே உரிமை!

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மலை உச்சியில் தீபம் ஏற்ற பர்வத ராஜகுலத்தினருக்கு (மீனவர்) உள்ள உரிமையாகும். இது, பண்டைய காலத்தில் சிவன் படையினராக இருந்த செம்படவர் சமூகத்தின் வழித்தோன்றல்களாக இவர்களை கருதுவதனால் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


