News June 27, 2024
கீழடியில் ‘தா’ எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

கீழடி கொந்தகையில் ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 செ.மீ., அகலமும், 4 செ.மீ., உயரமும் கொண்டுள்ள அந்த பானை ஓட்டில், 2ஆம் எழுத்து இருப்பதற்கான தடயமும் இருக்கலாமெனக் கூறப்படுகிறது. அகழாய்வு பணிகள் நடைபெறுவதால், பாசி, கண்ணாடி மணிகளைத் தொடர்ந்து மேலும் பல அரிய பொருள்கள் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 29, 2025
தமிழகத்தை கடனாளி ஆக்கிய திமுக: EPS

கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என EPS கூறியுள்ளார். கொரோனா பேரிடரால் அதிமுக ஆட்சியில் அரசுக்கு வருமானம் இல்லாத போதிலும் விலைவாசி உயரவில்லை. தற்போது GST, பத்திரப்பதிவு, கலால் வரி உயர்ந்து வருமானம் அதிகரித்தும் திமுக அரசு கடன் வாங்குவதாக EPS சாடியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழக மக்களை கடனாளி ஆக்கியது தான் CM ஸ்டாலினின் சாதனை என அவர் விமர்சித்துள்ளார்.
News December 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 564
▶குறள்:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
▶பொருள்: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
News December 29, 2025
விஜய்யின் புதிய குட்டி ஸ்டோரி

‘ஜனநாயகன்’ விழாவில் ரசிகர்களிடம் குட்டி ஸ்டோரி ஒன்றை விஜய் பகிர்ந்தார். தன் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணி, மழையில் நனையக்கூடாது என ஆட்டோகாரர் குடையை தருகிறார். எப்படி திருப்பி தருவது என கேட்டதற்கு, குடை தேவைப்படும் ஒருவரிடம் கொடுங்கள் என கூறியுள்ளார். பல கைகள் மாறிய அக்குடை இறுதியாக ஆட்டோகாரர் மகளிடம் வந்தது. எனவே, சின்ன சின்ன நல்லது செய்தால் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.


