News May 17, 2024
4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தலா 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லை, குமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு 3 குழுக்களும், கோவைக்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது ஜாக்பாட்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், புதிய உணவு தானிய விநியோக விகிதம் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த உணவு தானியங்களின் அளவு (35kg) மாறவில்லை. கோதுமையின் அளவு அதிகரிக்கப்பட்டு, அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், PHH அட்டைதாரர்களுக்கு 1kg-க்கு பதில் 2kg கோதுமை, 4kg-க்கு பதில் 3kg அரிசி வழங்கப்படும்.
News December 8, 2025
IUML தவெகவில் இணைய திட்டமா?

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தலுக்கு 5 சீட்கள் கேட்டிருக்கிறது. ஆனால் ஆளும் தரப்பு, கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள்தான் ஒதுக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறதாம். ஒருவேளை கேட்பதை கொடுக்காத பட்சத்தில் IUML தவெகவில் இணையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான Official தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
தாய்லாந்து-கம்போடியா மோதல்: மீண்டும் போர் பதற்றம்!

கடந்த அக்டோபர் மாதம் தான், டிரம்ப் முன்னிலையில் <<17232581>>தாய்லாந்து-கம்போடியா<<>> போர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், இன்று எல்லையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தங்கள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக கூறி, கம்போடியாவின் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதை கம்போடியா மறுத்துள்ள நிலையில், மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.


