News May 17, 2024

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தலா 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லை, குமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு 3 குழுக்களும், கோவைக்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

நெல்லை: மக்களுக்கு SMS மூலம் வார்னிங்

image

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்படுவதல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் இறங்குவதை தவிர்க்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நேற்று முதலே SMS அனுப்பப்பட்டது.

News November 25, 2025

மீனவர் நலனில் PM மோடிக்கு அதிக அக்கறை: RN ரவி

image

மீனவர் நலனில் PM மோடி அதிக அக்கறை செலுத்தி வருவதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மீனவர் தின விழாவில் பேசிய அவர், மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

News November 25, 2025

புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

image

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!