News November 17, 2024
பீர் அருந்துவதால் ஏற்படும் தீமைகள்

அளவாக பீர் அருந்துவது சில <<14637540>>நன்மைகள்<<>> அளிப்பதாக சில ஆய்வுகள் உறுதிப்படுத்தினாலும், இதனால் உடல்நலத்துக்கு பல்வேறு கெடுதல்களும் உண்டு. அடிக்கடி அல்லது தொடந்து பீர் அருந்துவது, மதுவுக்கு அடிமையாக்குகிறது. அதிகம் பீர் அருந்துவதால் கல்லீரல் நோய் (ஃபேட்டி லிவர்) உருவாகிறது. பீர் அருந்துவதால் தொப்பை பெரிதாகும், உடல்பருமனும் கூடும். நெஞ்செரித்தல், தூக்கமின்மை அதிகரிக்கும். ஆகவே, மதுவை தவிர்த்தல் நலம்.
Similar News
News March 14, 2026
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியிருந்தது. இம்முறை ஒரு குடும்ப அட்டைக்கு ₹3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
News March 14, 2026
NR காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு இறுதியானது!

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி NR காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை உறுதி செய்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை பிரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
மார்ச் 14: வரலாற்றில் இன்று

▶1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது. ▶1998 – சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ▶1918 – தென்னிந்திய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த தினம். ▶1965 – பாலிவுட் நடிகர் அமீர் கான் பிறந்த தினம். ▶1986 – தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த தினம். 1883 – பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.


