News December 6, 2024

இயக்குநர் ஜெயபாரதி காலமானார்

image

தமிழில் மாற்று சினிமாவை இயக்குவதில் உறுதியாக இருந்த இயக்குநர் ஜெயபாரதி (77) சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. 1979ஆம் ஆண்டு ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் ‘குடிசை’ படத்தை இயக்கினார் ஜெயபாரதி. பின்னர், 2010ஆம் ஆண்டு புத்திரன் படத்தை இயக்கி தமிழக அரசின் விருதுகளை வென்றார்.

Similar News

News January 14, 2026

செங்கை: தொழிலாளி துடிதுடித்து பலி!

image

ஈச்சங்காட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அமைமச்ஹி (35) கட்டிட தொழிலாளி. அந்த பகுதியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். தனக்கு சொந்தமான டூவீலரில் ஈச்சங்காட்டிலிருந்து காயார் நோக்கி சென்ற போது நிலைத்தடுமாறி சாலையோர சுவரில் மோதி படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News January 14, 2026

நள்ளிரவில் பஸ்களை ஆய்வு செய்த அமைச்சர்!

image

பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் புறப்படுகின்றனவா, டிக்கெட் விலை சரியாக உள்ளதா என்பதை மக்களிடமும் கேட்டறிந்தார். மேலும், கூடுதல் கட்டணத்தை தடுக்க 36 குழுக்கள் தணிக்கை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News January 14, 2026

சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

image

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.

error: Content is protected !!