News December 30, 2024
சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் வாக்குமூலம்

திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாதகவினர் சிலர் வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரான வருண்குமார், நாதகவினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
Similar News
News March 25, 2026
விஜய் விவகாரம்.. சமுத்திரக்கனி விளக்கம்

விஜய் குறித்து பேசியது தொடர்பாக சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது என்று கூறிய அவர், அது ஒரு அக்கறை, வலி மற்றும் என் மனதில் பட்டதாக நான் பார்க்கிறேன் என்றார். மேலும், வீடியோ எடுக்கும்போதே தனக்கு தெரியும் என்றும், வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலையை பாத்துடாங்க எனவும் தெரிவித்தார்.
News March 25, 2026
சர்தார் வல்லபாய் பொன்மொழிகள்

➤கடின உழைப்பும் தியாகமுமே வெற்றியின் அடித்தளம். அவை இல்லாமல், மிகப்பெரிய கனவுகள் கூட நிறைவேறாமல் போய்விடும். ➤முயற்சியில் காட்டும் நிலைத்தன்மையும் மனவுறுதியும், சாதாரணச் செயல்களை அசாதாரணச் சாதனைகளாக உருமாற்றுகின்றன. ➤நாம் சமத்துவ உணர்வை வளர்த்து, தீண்டாமையை ஒழிக்க வேண்டும். ➤இன்பமும் துன்பமும் காகிதப் பந்துகள் போன்றவை.
News March 25, 2026
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது: டிரம்ப்

ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் உருவாக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஈரான் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகளை மறுப்பதோடு, இது போலியான தகவல் என்று கூறுகின்றனர். மேலும் 5 நாள் காலக்கெடுவுக்குப் பின் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று டிரம்ப் நம்பிக்கையுடன் இருக்கிறார்.


