News August 15, 2024
இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை: சிசோடியா

17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என சமீபத்தில் ஜாமினில் வெளியான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நீண்ட காலம் சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தன்னை பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்தார்கள் என்று விமர்சித்த அவர், இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜாமீன் பெறுவது கடினமான காரியம் எனவும் தெரிவித்தார்.
Similar News
News December 5, 2025
US போல் இந்தியாவிற்கு உரிமை உள்ளது: புடின்

அமெரிக்கா தங்களிடம் யுரேனியத்தை வாங்கிக் கொண்டே, இந்தியாவை கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறுவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்காவிற்கு உரிமை இருப்பது போல், இந்தியாவிற்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலக எரிவாயு சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை, சில ஆதிக்க நாடுகள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 5, 2025
தீபத்தூணில் இன்றும் தீபம் ஏற்றப்படவில்லை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றிரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறி, 2-வது முறையாக இன்றும் தீபம் ஏற்ற போலீஸ் அனுமதி மறுத்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், இந்து அமைப்பினரை போலீஸ் கைது செய்தது. இதனிடையே மதுரை HC உத்தரவுக்கு எதிராக SC-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


