News March 26, 2025
அமித் ஷாவிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: இபிஎஸ்

தமிழக மக்களின் பிரச்னைக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். 45 நிமிடங்களும் தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்தே விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறினார்.
Similar News
News February 26, 2026
நாளை பேச்சுவார்த்தை இல்லை: நயினார்

மார்ச் 1-ம் தேதிக்கு பிறகே NDA-வில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பியூஷ் கோயல் தமிழகம் வரவில்லை எனவும், EPS உடன் கலந்து பேசிவிட்டு பேச்சுவார்த்தைக்கான நாளை பாஜக முடிவு செய்யும் என்றும் கூறினார். கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது.
News February 26, 2026
வெற்றியல்ல.. மாபெரும் வெற்றி தேவை!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய மேட்சில், இந்தியாவிற்கு வெற்றி அல்ல, மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அதாவது முதலில் இந்தியா பேட்டிங் செய்தால், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால், 181 ரன்களை ஜிம்பாப்வே அடித்தாலும், அதை 12.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும். சோதனையை வென்று முன்னேறுமா இந்தியா?
News February 26, 2026
சம்பளம் மேலும் ₹5,000 உயர்ந்தது.. அமைச்சர் அறிவிப்பு

கல்லூரி கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை மேலும் ₹5,000 உயர்த்தி அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதன்படி, கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ₹25,000 – ₹30,000 ஆகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ₹20,000 – ₹25,000 ஆகவும் ஊதியம் உயர்ந்துள்ளது. இந்த ஊதிய உயர்வு மார்ச் 1 முதல் அமலாகிறது. இதன் மூலம் 9,646 விரிவுரையாளர்கள் பயனடைவர்.


