News March 26, 2025
அமித் ஷாவிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: இபிஎஸ்

தமிழக மக்களின் பிரச்னைக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். 45 நிமிடங்களும் தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்தே விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறினார்.
Similar News
News December 26, 2025
சென்னை: தோஷம் என்ற பெயரில் தங்க நகை திருட்டு

சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவைச் சேர்ந்த தீபக் ஜெயின் (29) மீது நேற்று அடையாளம் தெரியாத இருவர், தோஷம் இருப்பதாக கூறி வசியப்படுத்தி தங்க வளையல்களை திருடிச் சென்றனர். மந்திரம் சொல்லுவது போல் கையை பிடித்து, பேப்பரில் சுற்றி பையில் வைக்கச் சொல்லியபோது, 10 சவரன் வளையல்கள் பறிக்கப்பட்டன. மயக்கம் தெளிந்தபின் திருட்டு தெரியவந்தது. புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 26, 2025
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்திய அணி

இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 3-வது டி20 இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின், முதல் டி20-ல் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற IND, இந்த போட்டியிலும் ஆதிக்கத்தை செலுத்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேநேரம், இது வாழ்வா சாவா போட்டி என்பதால் பதிலடி கொடுக்க SL வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
News December 26, 2025
ராகுல் காந்திக்கு நன்றி சொன்ன மத்திய அமைச்சர்

கர்நாடகாவில், ஐபோன் தயாரிப்பு ஆலையில் 9 மாதத்துக்குள் 30,000 பேரை பணிக்கு அமர்த்தி, பாக்ஸ்கான் சாதனை படைத்தது. இதை SM-ல் பகிர்ந்த ராகுல் காந்தி, கர்நாடக காங்., அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை ஒப்புக் கொண்டதற்கு நன்றி; PM-ன் தொலைநோக்கு பார்வையால் இந்தியா உற்பத்தி பொருளாதாரமாக மாறி வருவதாக குறிப்பிட்டார்.


