News March 26, 2025
அமித் ஷாவிடம் கூட்டணி பற்றி பேசவில்லை: இபிஎஸ்

தமிழக மக்களின் பிரச்னைக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இருமொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தே அமித் ஷாவிடம் பேசியதாக கூறினார். 45 நிமிடங்களும் தமிழகத்தில் கிடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்தே விளக்கமாக எடுத்துரைத்ததாக கூறினார்.
Similar News
News January 21, 2026
நெல்லையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் சேரையை சேர்ந்த இளைஞர்கள் வாய்க்காலில் குளித்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்றிரவு பொட்டல் கிராமத்துக்கு சென்று இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அவர்களை பொட்டல் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி போலீஸ் இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து இளங்கோ உள்பட 3 பேரை கைது செய்தனர்.
News January 21, 2026
IND-க்கு போகாதீங்க.. BAN-க்கு ஆதரவாக குதித்த PAK!

இந்தியாவில் நடைபெறவுள்ள T20I WC தொடரில் பங்கேற்பது தொடர்பான சர்ச்சையில், <<18842103>>வங்கதேசத்திற்கு <<>>பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி ICC-க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கருதும் வங்கதேசம், இந்தியாவில் விளையாட தயக்கம் காட்டுவதை முழுமையாக ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News January 21, 2026
மனைவியை அடித்து கொன்றுவிட்டேன்.. WhatsApp Status!

‘என் வாழ்க்கையின் பாதியை கொன்றுவிட்டேன்’ என மனைவியை கொன்று கணவர் WhatsApp Status வைத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த ஆஞ்சநேயலு, வேலையை ராஜினாமா செய்ய பணப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவி சரஸ்வதியுடன் தகராறு ஏற்படவே, கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை, ஆஞ்சநேயலு அடித்து கொலை செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏற்கெனவே, <<18436075>>கோவையில் <<>>இதே போல, சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


