News September 21, 2025

GST குறைக்கவில்லையா? தமிழிலே புகாரளிக்கலாம்

image

2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம். <>INGRAM<<>> என்ற ஒருங்கிணைந்த போர்ட்டல் வழியாக லாக் இன் செய்தும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

Similar News

News September 21, 2025

வறுமையை வென்ற 25 கோடி மக்கள்: PM மோடி

image

GST சீர்திருத்தங்கள், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என PM தெரிவித்துள்ளார். மா துர்க்கையின் ஆசியோடு நவராத்திரியின் முதல் நாளில், ஆத்மநிர்பார் பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்குவதாகவும், GST சீர்திருத்தங்களால் மக்கள் தங்களுக்கு பிடித்த பொருள்களை எளிதில் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார். தனது 11 ஆண்டுகால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையை வென்றதாக PM குறிப்பிட்டார்.

News September 21, 2025

இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி: PM மோடி

image

நாளை (செப்.22), நவராத்திரியின் முதல் நாளில் இருந்து புதிய ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வருவதாக PM மோடி தன் பேச்சில் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் இந்த விழாக்காலத்தில் இருந்து பயன்பெறத் தொடங்குவர் என்ற அவர், சுயசார்பு இந்தியாவை நோக்கிய மிகப்பெரிய அடியை எடுத்து வைப்பதாக கூறினார். மேலும், இந்த வரிச் சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றார்.

News September 21, 2025

BREAKING: நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி!

image

ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் மிகப்பெரிய சேமிப்பு திருவிழா என மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நாட்டு மக்கள் 2.5 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகள் ஜிஎஸ்டியால் நீக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

error: Content is protected !!