News March 10, 2025
நடிகைக்கு அரசு நிலம் ஒதுக்கீடா? இறுகும் சிபிஐ பிடி

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2023ல் அவரது நிறுவனத்திற்கு கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் 12 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நடிகைக்கு எதிராக விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.
Similar News
News March 10, 2025
ஏசி விலை ₹2,000 உயர்வு

வெயில் இப்போதே வெளுத்து வாங்குவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஏசியை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஏசி விலையை யூனிட் ஒன்றுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படுவதாக ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. புளூஸ்டார் நிறுவனம் 3% அளவுக்கு விலையை உயர்த்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஹயர் நிறுவனமும் தனது ஏசியின் விலை 4 – 5% வரை உயர்த்த உள்ளது.
News March 10, 2025
IPLஇல் தவறான விளம்பரம் வேண்டாமே

IPL கிரிக்கெட் தொடரின்போது மது, பான் மசாலா போன்ற சுகாதார கேடான பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. IPL தலைவருக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், மைதானங்களிலும், டிவிகளிலும் இத்தகைய விளம்பரங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆல்கஹால் & டொபாகோ போன்றவற்றால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
News March 10, 2025
சர்வதேச விக் தினம் இன்று – வரலாறு தெரியுமா?

இதற்கெல்லாம் தனியாக தினம் இருக்கிறதா என வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. ஆனால், International Wig Day கடைபிடிக்கப்படுவது வேடிக்கைக்காக அல்ல. புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்தவர்கள் மற்றும் பிற நோய்களால் தலைமுடியை இழந்தவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுக்காக இந்த தினம் உருவானது. முதன்முதலில் டென்மார்க் நாட்டில் தான் விக் தினம் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.