News October 1, 2025
வாரிசுக்கு ‘நோ’ சொன்னதா திமுக தலைமை?

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு பதிலாக தனது 3வது மகன் மகேஷை எப்படியாவது திருச்செந்தூரில் நிறுத்திவிடலாம் என்ற யோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கூட தலைமையின் காதுகளுக்கு விஷயத்தை அமைச்சர் தரப்பு பாஸ் செய்ததாம். ஆனால் தலைமையோ, அது சரிவராது எனவும், தேர்தல் வேலைகளை கவனியுங்கள் என்றும் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 1, 2025
பரப்புரை தற்காலிகமாக ரத்து: விஜய்

தவெக பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, கட்சியின் X பக்கத்தில், நாம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் இருக்கும் இச்சூழலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
News October 1, 2025
ஹிட் லிஸ்டில் இருக்கும் 2 அமைச்சர்களா?

திமுகவில் களையெடுக்கும் பணிகளை உதயநிதி-செந்தில் பாலாஜி காம்போ செய்துவருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவை மா.செ.வான கார்த்திக் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு இளைஞரணியில் இருந்த செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார். இதேபோல, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி 2 அமைச்சர்கள் & 5 MLA-க்களுக்கு அடுத்த முறை சீட் வழங்காமல் கல்தா கொடுக்க திட்டமிடுவதாக தகவல் உலவுகிறது. அந்த 2 அமைச்சர்கள் யாராக இருக்கும்?
News October 1, 2025
உருவானது புயல் சின்னம்.. கனமழை கொட்ட போகுது

மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!