News August 25, 2024

கட்சிக்கு நன்கொடை கேட்டாரா சீமான்?

image

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் அரசியல் கட்சித் தலைவரும், தொழிலதிபருமான ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரிடம், சீமான் தனது கட்சிக்கு நிதி தந்து உதவும்படி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைக்கேட்ட அவர், தனது கல்லூரியில் ஆண்டுக்கு 10 சீட் கூட தருகிறோம், நன்கொடையெல்லாம் தர முடியாதென கூறி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 11, 2025

FLASH: விஜய்யை சந்தித்த GCC தூய்மை பணியாளர்கள்

image

சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்தில் விஜய்யை, தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி(GCC) தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். CPM, NTK, DMDK உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஜய்யை போராட்ட குழு நேரில் சந்தித்துள்ளது.

News August 11, 2025

மீண்டு எழுந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

image

கடந்த வாரத்தில் கடும் சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,604 புள்ளிகளிலும், நிஃப்டி 24,585 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. Eternal, Reliance, SBI, Tata Motors உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?

News August 11, 2025

என் சாவுக்கு 3 பேரு தான் காரணம்.. மாணவி சோக முடிவு

image

ராகிங் கொடுமை ஒரு கல்லூரி மாணவியின் சாவிற்கு காரணமாகியுள்ளது. கேரளாவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு B.A. படிக்கும் மாணவி அஞ்சலி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடிதத்தில், ‘எனது மரணத்திற்கு காரணம் இந்த 3 பேர் தான். என்னை மன ரீதியாக தொல்லை கொடுத்து சோர்வடைய செய்தது வர்ஷா, பிரதீப் மற்றும் பிற நண்பர்களே’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 3 பேரையும் போலீஸ் விசாரித்து வருகிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல!

error: Content is protected !!