News May 20, 2024

பணத்தை குப்பையில் போட்டதா RCB

image

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இதுகுறித்து அவரது தந்தை தயாள் கூறுகையில், “யாஷை பெங்களூரு அணி ₹5 கோடிக்கு வாங்கியபோது அவர்கள் பணத்தை குப்பையில் போடுவதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தற்போது அவர்களே தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்” என்று பெருமிதப்பட்டார்.

Similar News

News March 9, 2026

தமிழக தேர்தல்: வங்கிகளின் கெடுபிடியால் மக்கள் அவதி!

image

TN தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை வங்கிகள் விதித்துள்ளன. வங்கிகளின் பிரதிநிதிகளாக உள்ள BC-க்கு(Business Correspondent) வழங்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. BC-க்கு நாளொன்றுக்கு ₹1,00,000, தனி நபருக்கு ₹5,000 மட்டுமே வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கிராமப்புற மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News March 9, 2026

விஜய் போட்டியிடும் தொகுதி இறுதியானது

image

தவெக <<19333933>>வேட்பாளர்கள் <<>>பட்டியல் இறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட உள்ளதாகவும், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீரங்கத்தில் கு.ப.கிருஷ்ணன், கரூரில் மதியழகன், கோபியில் செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ், மயிலாப்பூரில் வெங்கட்ராமன், எழும்பூரில் ராஜ்மோகன், அம்பத்தூரில் ஜே.சி.டி பிரபாகர் களம் காண இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 9, 2026

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

image

கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாக ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய போர் குறித்து பேசிய அவர், போரை PM மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், டெஹ்ரானில் உள்ள தூதரகம் இந்தியர்களை பாதுகாக்க முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மேற்காசிய நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

error: Content is protected !!