News May 20, 2024
பணத்தை குப்பையில் போட்டதா RCB

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இதுகுறித்து அவரது தந்தை தயாள் கூறுகையில், “யாஷை பெங்களூரு அணி ₹5 கோடிக்கு வாங்கியபோது அவர்கள் பணத்தை குப்பையில் போடுவதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தற்போது அவர்களே தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்” என்று பெருமிதப்பட்டார்.
Similar News
News September 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 458 ▶குறள்: மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. ▶பொருள்: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
News September 14, 2025
சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

சிம்பு – வெற்றிமாறன் படத்தில் பணியாற்றுவதை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிக்கவுள்ள வடசென்னை யுனிவர்ஸ் படத்தின் ப்ரோமோ வெளியானது. இதன் மிரட்டலான பின்னணி இசையை கேட்டு இசையமைப்பாளர் யாராக இருக்கும். சந்தோஷ் நாராயணனா ? ஜிவி பிரகாஷா என ரசிகர்கள் விவாதித்தனர். இந்நிலையில், அப்படம் எடுக்கப்பட்டால் தானே இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
News September 14, 2025
விஜய்யின் பரப்புரை ரத்து

பெரம்பலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். ஆனால் மக்கள் கூட்டத்திற்கு இடையே அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கு விஜய்க்கு நள்ளிரவுக்கு மேல் ஆனது. இதனால் வேறு வழியின்றி பெரம்பலூர் பரப்புரை ரத்தானது. விஜய்யின் பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.