News March 21, 2025
இறையாண்மைக்கு எதிராக பேசினாரா ராகுல்?

காங்கிரஸ் MP ராகுல் காந்தி நேரில் ஆஜராக, உ.பி சம்பல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 15ல், காங்கிரஸ் தலைமை அலுவலக திறப்பு விழாவின்போது பாஜகவை மட்டுமின்றி இந்திய அரசையும் எதிர்த்து காங்கிரஸ் போராடுகிறது என பேசியிருந்தார். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News March 28, 2025
வசூலில் புதிய உச்சம் தொட்ட L2: எம்புரான்!

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய, ‘L 2: எம்புரான்’, நாடு முழுவதும் முதல் நாளில் ₹ 21 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், முதல் நாளில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. முன்னதாக, இச்சாதனையை பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (₹ 8.95cr) பெற்றிருந்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா.. படம் எப்படி இருக்கு?
News March 28, 2025
10 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் ஜாக்கிரதை!

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!
News March 28, 2025
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 28) முதல் அடுத்த மாதம் (ஏப்.15) வரை நடைபெறவிருக்கும் இத்தேர்வை 4,46,411 பள்ளி மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் 272 பேர் என மொத்தம் 9,13,036 பேர் எழுதவுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் பிற்பகல் 1.15 வரை தேர்வு நடைபெறவுள்ளது. ALL THE BEST