News October 3, 2025
விஜய்க்காக CM ஸ்டாலினிடம் கண்டிஷன் போட்டாரா ராகுல்?

விஜய் மீது வழக்கு வேண்டாம் என CM ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால்தான், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என வேல்முருகன் கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுபற்றி CM விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறிய அவர், விஜய் அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், விஜய், முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 3, 2025
கரூர் துயரம்: ஒரு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கும் நிலையில், எவ்வாறு சிபிஐ-க்கு மாற்ற முடியும்? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக்கூறிய நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி செய்தனர்.
News October 3, 2025
Sports-ல் அரசியல் வேண்டாம்: PAK Ex கேப்டன்

பாக்., வீராங்கனை நடாலியா பெர்வாய்ஜ் <<17900065>>Azad Kashmir<<>>-ஐ சேர்ந்தவர் என பாக்., Ex. கேப்டன் சனா மிர் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில், அப்பகுதியில் வளர்ந்ததால் நடாலியா சந்தித்த கஷ்டங்களை விளக்கவே அப்படி கூறியதாக சானா மிர் விளக்கமளித்துள்ளார். வர்ணனையாளராக சொன்ன விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறிய அவர், விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
News October 3, 2025
கரூர் துயர வழக்கு: ஐகோர்ட் அதிரடி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை; பாதுகாப்பு அளிப்பதில் கட்சி பேதம் பார்க்காதீர் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டங்களின்போது குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இழப்பீடுக் கோரிய வழக்குகளில் விஜய் & அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.