News April 13, 2024
ராகுகாலம் பார்க்காமல் வேட்புமனு செய்தது உண்டா?

ராகு காலம் பார்க்காமல் எந்தவொரு திமுக வேட்பாளராவது வேட்புமனு தாக்கல் செய்தது உண்டா? என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தமிழிசை, இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?, தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனவும் கடுமையான சாடியுள்ளார்.
Similar News
News October 31, 2025
நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. இங்கு NO விடுமுறை

மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், அக்.22-ம் தேதி கனமழையால் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 31, 2025
காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கசாயம்!

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ✱செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேலை பருகலாம். SHARE IT.
News October 31, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


