News April 13, 2024
ராகுகாலம் பார்க்காமல் வேட்புமனு செய்தது உண்டா?

ராகு காலம் பார்க்காமல் எந்தவொரு திமுக வேட்பாளராவது வேட்புமனு தாக்கல் செய்தது உண்டா? என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தமிழிசை, இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?, தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனவும் கடுமையான சாடியுள்ளார்.
Similar News
News December 25, 2025
பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரத்தை வணங்குகிறேன்: EPS

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுநாளில் EPS புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஒப்பற்ற துணிவுடனும், நிகரில்லா விவேகத்துடனும் அந்நிய ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும்படை திரட்டிய முதல் பெண் விடுதலைப் போராளி; தமிழினப் பெண்களின் வீரத்திற்கு சான்றாக திகழும் நம் பெரும்பாட்டியார், பேரரசி வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாகத்தையும், தேச பக்தியையும் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
இந்த Dress-ஆல் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து

குழந்தைகளுக்கு Fancy ஆன, அழகழகான ஆடைகளை வாங்கினால் மட்டும் போதாது. அந்த உடைகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும். 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு பட்டன் வைத்த சட்டைகளை அணிவிக்க வேண்டாம். அவர்கள் அதை வாயில் வைத்து கடிக்கும்போது அதிலிருக்கும் பட்டன்கள் தொண்டைக்குள் சிக்கலாம். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். SHARE.
News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


