News March 29, 2024

ஆரத்திக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை?

image

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அண்ணாமலை, “அது என் மண், என் மக்கள் பயணத்தின்போது கொடுத்தது. ஆரத்திக்கு பணம் கொடுப்பது நமது கலாசாரம். வாக்குகளை பணம் கொடுத்து பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறியிருக்கிறார்.

Similar News

News October 29, 2025

திமுக கூட்டணியில் இணைகிறாரா ராமதாஸ்?

image

அண்மை கால அரசியல் நிகழ்வுகள் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைவதற்கான சிக்னல்களாக பார்க்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் விசிக, பாமக ஒரு அணியில் இருக்க முடியாது என பேசி வந்த திருமா, அண்மையில் திமுக கூட்டணியில் ராமதாஸ் வருகிறாரா என்ற கேள்விக்கு சைலண்டாக சென்றார். நேற்று இரவு, திமுக கூட்டணியில் உள்ள கொமதேக தலைவர் ஈஸ்வரன் திடீரென ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

News October 29, 2025

குல்தீப் or அர்ஷ்தீப் சிங்.. இன்று விளையாட போவது யார்?

image

ஆஸி., அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியில் பவுலர்களாக யார் யார் இடம்பெறுவார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. பும்ரா, வருண் ஆகியோருடன் ODI-யில் சிறப்பாக செயல்பட்ட ராணாவும் இருப்பார் என்றே நம்பப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக துபே & அக்சர் இடம்பெறும் நிலையில், அணியில் ஒரு இடம் மட்டுமே பாக்கி இருக்கும். அதற்கு, குல்தீப் & அர்ஷ்தீப் இடையே போட்டி நிலவும். இருவரில் யார் அணியில் இடம்பெறலாம்?

News October 29, 2025

விலை ₹4,000 வரை உயருகிறது

image

மெமரி ‘சிப்’ தட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5%-10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட் போர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் எல்பிடி, டிஆர்4 X, என்ஏஎன்டி பிளாஷ் மெமரி சிப்களின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவுகள் அதிகமாவதால் அதனை ஈடுசெய்ய விலையை உயர்த்த செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

error: Content is protected !!