News March 4, 2025
பெண்ணை கட்டிப் பிடித்தாரா ஆ.ராசா? FACT CHECK

பொதுவெளியில் ஒரு பெண்ணை திமுக எம்.பி. ஆ. ராசா கட்டிப்பிடிப்பதை போன்ற ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விமர்சனத்தை எழுப்பி வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து FACTCHECK குழு நடத்திய சோதனையில் அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் எனத் தெரியவந்துள்ளது. NCP MP சுப்ரியா சுலேவும், ஆதித்யா தாக்கரேவும் இருக்கும் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து இந்த போலி புகைப்படத்தை சிலர் உருவாக்கியுள்ளனர்.
Similar News
News December 27, 2025
தருமபுரி பொதுமக்களுக்கு HAPPY NEWS!

ஈரோடு – சென்னை இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து வழக்கமாக இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்(22650) ஜன.1-ம் தேதி முதல் 9:45 மணிக்கு புறப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இரவு 10:34-க்கு பதிலாக 11:19-க்கும், மொரப்பூரில் 10:59-க்கு பதிலாக 11:39-க்கும் நின்று செல்லும். இந்த ரயில் காலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
News December 27, 2025
ஆபரேஷன் ஆகாட் 3.0: டெல்லியில் 285 பேர் கைது

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபரேஷன் ஆகாட் 3.0-வை டெல்லி போலீஸ் நடத்தியது. இதில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 285 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆபரேஷன் ஆகாட் 1.0-வில் 70 பேரும், 2.0-வில் 500 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
News December 27, 2025
ரேஷன் கார்டு ரத்து.. அரசு முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ சரியான காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமோ (அ) ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றோ, e-KYC சரிபார்ப்பைச் சுலபமாக முடித்துக் கொள்ளலாம். SHARE IT.


