News March 16, 2024
சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்

2024 மக்களவைத் தேர்தலை ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்கும் இறுதி வாய்ப்பாக மக்கள் கருத வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் மூலம் இந்தியாவின் நியாயத்திற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட கிடைத்த கடைசி வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 5, 2025
வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.
News July 5, 2025
சீனாவை சீண்டிய கிரண் ரிஜிஜு.. என்ன ஆச்சு?

தலாய் லாமாவின் வாரிசு நியமனம் அவரது விருப்பப்படி அமைய வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் விவகாரங்களில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்காதவாறு தனது நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஓ நிங் வலியுறுத்தியுள்ளார்.
News July 5, 2025
அடுத்தடுத்து டக் அவுட் ஆகிய 6 பேர்… அசத்தல் சிராஜ்!

தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட், ஆலி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ், பஷீர், பிரைடன் ஆகியோர் டக் அவுட்டும் ஆக இங்கிலாந்து அணி சுருண்டது. இந்த வகையில் 6 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.