News August 18, 2024

DGCGI தலைமை இயக்குநர் காலமானார்

image

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கான சென்னை வந்த ராஜ்நாத், கடலோர காவல் படையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை வந்திருந்த ராகேஷ் பால்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட்டான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 4, 2025

இந்தியா தோல்விக்கு இதுதான் காரணமா?

image

358 ரன்களை குவித்தும் இந்தியா தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சு மற்றும் பீல்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மார்க்ரம் 53 ரன்களில் இருக்கும்போது அவரின் கேட்சை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறியதோடு, ரன்களையும் வாரி வழங்கினர். அர்ஷ்தீப், ஜடேஜா மட்டுமே SA பேட்டர்களை கொஞ்சம் கட்டுப்படுத்தினர். SA அணியின் பேட்டிங் டெப்த்தையும் இந்தியா கணிக்க தவறிவிட்டது.

News December 4, 2025

20 மாவட்டங்களில் பேய் மழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், குமரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள்.

News December 4, 2025

சனாதன தர்மத்தை பரப்ப வேண்டும்: பாலய்யா

image

பாலய்யா நடித்து வரும் 5-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘அகண்டா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசும்போது, சனாதன தர்மம் பற்றி அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தர்மத்திற்கு ஆதரவாக, அநீதிகளுக்கு எதிராக செயல்படுவதே சனாதன தர்மம் எனவும் அதை இளைஞர்களுக்கு இந்த படம் கற்று கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!