News March 24, 2024

இதை செய்யும் பக்தர்களுக்கு சிவன் அருள் கிடைக்கும்

image

சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபட சில வழிமுறைகள் உள்ளன. கோயிலுக்குள் நுழைந்ததும், நந்தியையும், அதன்பிறகு விநாயகரையும் வணங்க வேண்டும். பின்னர் சிவன் சந்நிதிக்கு சென்று வழிபட வேண்டும். அதையடுத்து அம்பாள் சந்நிதியில் வழிபட வேண்டும். அதைத் தொடர்ந்து, நவகிரக வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சந்நிதியை சுற்றிவர வேண்டும். இப்படி செய்வதால், சிவன் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News April 18, 2025

நாயால் வந்த ED ரெய்டு!

image

பெங்களூரை சேர்ந்த சதீஷ் ₹50 கோடிக்கு ஓநாய் இன கேடாபாம்ப் ஒகாமி நாய் வாங்கியதா சோஷியல் மீடியாவுல பதிவிட்டாரே ஞாபகமிருக்கா? நெட்டிசன்கள் கூட அவர தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. ஆனா, இதுல தான் ட்விஸ்ட். அது ஓநாய் இன நாயே இல்லையாம். பக்கத்து வீட்டுல வளர்ற இந்திய இன நாயாம். விலை கூட ஒரு லட்சமாம். ED அவரு வீட்டுக்கு போயி கிடுக்கிப்பிடி போட்டதுல சதீஷ் சரண்டரானாரு. எதுக்கு இந்த பெருமை?

News April 18, 2025

அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

image

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.

News April 18, 2025

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

image

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, <<16081235>>முன்னாள் MLA<<>> உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டு கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.

error: Content is protected !!