News August 20, 2024
கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம்: ஐகோர்ட்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம். இதை யாரும் தடுக்க கூடாது. இதை மீறினால், உரிய தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபையில் பக்தர்கள் தரிக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.
Similar News
News March 11, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹4,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர், சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வணிக சிலிண்டர் ₹4,000-க்கும், தருமபுரியில் ₹3,000-க்கும் விற்கப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
News March 11, 2026
ஒரே இடம்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் மோடி!

நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், <<19339925>>பாஜகவை CM ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்<<>> செய்திருந்தார். அதற்கு அதே திருச்சியில் இன்று மாலை PM மோடி பதிலடி கொடுக்க உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். பஞ்சப்பூரில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற உள்ளனர்.
News March 11, 2026
மக்கள் பீதியடைய வேண்டாம்: ஷோபா கரண்ட்லஜே

போரினால் நம் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90% மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளது; இந்நிலையில் கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை பாதிக்கும் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


