News August 26, 2024
தெய்வீக லட்சியங்களுக்கு அர்ப்பணிப்போம்: ஜனாதிபதி

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த விழா நம்மை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கிருஷ்ணன்-அர்ஜுனன் இடையிலான உரையாடல் மனிதகுலத்திற்கு உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரம் என்றுள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றம், செழிப்புக்காக உழைக்க உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 26, 2025
வாகன ஓட்டிகளுக்கு HAPPY NEWS

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. இனி தயாரிக்கப்படும் பைக், ஸ்கூட்டர் அனைத்திலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ABS) கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பிரீமியம் பைக்குகளில் மட்டுமே ABS அம்சம் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.
News October 26, 2025
சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்ததா பாகிஸ்தான்?

சவுதியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பலுசிஸ்தானை மறைமுகமாக தனிநாடு என்று குறிப்பிடும் வகையில் சல்மான் கான் பேசியிருந்தார். இதையடுத்து, அவரை கண்காணிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் தனி நாடு கேட்டு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
பிஹார்: INDIA கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள்

பிஹார் எதிர்க்கட்சிகளின் CM வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், ₹50 லட்சத்திற்கு காப்பீடு திட்டம். முடி திருத்தம் செய்பவர்கள், தச்சர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக, குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.


