News August 26, 2024
தெய்வீக லட்சியங்களுக்கு அர்ப்பணிப்போம்: ஜனாதிபதி

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த விழா நம்மை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கிருஷ்ணன்-அர்ஜுனன் இடையிலான உரையாடல் மனிதகுலத்திற்கு உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரம் என்றுள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றம், செழிப்புக்காக உழைக்க உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News February 18, 2026
இதை வாயில் வைக்காதீங்க: ஆபத்து

வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. கூல் லீப் போன்று காணப்படும் நிக்கோடின் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படவில்லை; பாதுகாப்பு, செயல்திறன், தரமும் நிரூபிக்கப்படவில்லை என எச்சரித்துள்ளது. மேலும், இதை வாயில் வைத்தால் தலைவலி, பல் சொத்தை, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுமாம்.
News February 18, 2026
தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: தவெக

கோவை மக்கள் மீது திமுகவினருக்கு தனிப்பட்ட வன்மம் இருப்பதை <<19172256>>தயாநிதி மாறனின்<<>> பேச்சு உறுதிப்படுத்துவதாக அருண்ராஜ் கூறியுள்ளார். திமுகவினருக்கு மக்களை மரியாதையாக நடத்தத் தெரியாது என்பதற்கு பல உதாரணங்கள் இருப்பதாக தனது X பதிவில் அவர் சாடியுள்ளார். மேலும், கெட்ட எண்ணத்தில் பேசிய தயாநிதி மாறன் MP, அதை பார்த்து சிரித்த செந்தில் பாலாஜி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News February 18, 2026
BREAKING: அரசு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதால், நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என்று அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார். 30 நாள்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, மார்ச் 21-ம் தேதி ரமலான் கொண்டாடப்படும் என்பதால், அன்று அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


