News August 26, 2024
தெய்வீக லட்சியங்களுக்கு அர்ப்பணிப்போம்: ஜனாதிபதி

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து கூறியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த விழா நம்மை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கிருஷ்ணன்-அர்ஜுனன் இடையிலான உரையாடல் மனிதகுலத்திற்கு உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரம் என்றுள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றம், செழிப்புக்காக உழைக்க உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News February 14, 2026
உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறும்.. PM மோடி

கடந்த 11 ஆண்டுகளில் நல்ல சீர்திருத்தங்களை வழங்கியுள்ளதாகவும், இந்தியா பிற நாடுகளின் வளர்ச்சி மாதிரியை பின்பற்றவில்லை என்றும் PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் ET NOW வணிக உச்சி மாநாட்டில் பேசிய அவர், முந்தைய அரசுகள் மேற்கொண்ட கட்டாய சீர்திருத்தங்கள் ஒருபோதும் நல்ல முடிவுகளை வழங்காது என்றும் தற்போதைய இந்தியா உலக வளர்ச்சியின் இன்ஜினாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.
News February 14, 2026
மீண்டும் அப்போலோவில் H.ராஜாவை பார்த்த முதல்வர்

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் H.ராஜாவை, 2-வது முறையாக நேரில் சந்தித்து CM ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த ஸ்டாலின், விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட H.ராஜா, முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
விஜய் நிகழ்ச்சியில் மரணம்: காவல்துறை விளக்கம்

திமுகவின் கூட்டங்களுக்கு இரவு 7 மணிக்கு மேலாகவும், தவெக கூட்டத்திற்கு மதிய நேரத்திலும் காவல்துறை அனுமதி கொடுப்பதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக இன்று நிகழ்ந்த மரணத்திற்கு கூட வெயிலில் அனுமதி அளித்ததுதான் கரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மதியம் 12 முதல் 3 மணி வரை கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடிதத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.


