News March 25, 2025
தேவநாதன் யாதவ் சொத்துக்கள் ஏலம்?

உங்கள் சொத்துக்களை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா? என்பதற்கு பதிலளிக்கும்படி, தேவநாதன் யாதவிற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ₹24.50 கோடி மோசடி செய்ததாக அரசியல்வாதியான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முதல் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2ஆவது முறையாக ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், கோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 26, 2025
ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?

ORS கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசலை கொடுக்கலாம். மேலும் கோடைக் காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியைத் தடுக்கவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
News March 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
News March 26, 2025
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் அத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாகவும் தனது X பதிவில் அவர் கூறியுள்ளார்.