News March 16, 2024

அரசியல் கட்சியினரின் சுவரில் வரையப்பட்ட சின்னங்கள் அழிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

Similar News

News September 2, 2025

கோவை: தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

image

கோவை மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 2, 2025

நாய்க்குட்டியை துன்புறுத்திய பெண் மீது வழக்கு!

image

கோவை, கவுண்டம்பாளையத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நாய்க்குட்டியை முட்புதரில் வீசி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து விலங்குகள் நலத் தன்னார்வலர் பிரியா, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் நேற்று (செப்டம்பர் 1) அப்பெண் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 2, 2025

BREAKING: கோவையில் வெடிகுண்டு மிரட்டல்!

image

கோவையின் மையத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. அருகிலேயே கோவை எஸ்பி அலுவலகம், சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதில் புரளி என தெரியவந்தது. இந்த நிலையில் இன்று 3ஆம் முறையாக வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

error: Content is protected !!