News April 22, 2025
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News December 2, 2025
சாகும் வரை உண்ணாவிரதம்.. பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

SIR மூலம் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை அளிக்க கூடாது என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை ECI படுகுழியில் தள்ளுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், ECI & மத்திய அரசை கண்டித்து நாளை (டிச.3) காலை 8 மணி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவுக்காக வாக்கு சேகரிப்பேன் என மன்சூர் கூறியிருந்தார்.
News December 2, 2025
பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
‘Word of the Year’ இது தான்!

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.


