News April 22, 2025
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News December 19, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு… வந்தாச்சு குட் நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கு மேல்முறையீடு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், திட்டத்தின் பயனர்களை அதிகரிக்க CM ஸ்டாலின் தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ₹1,000 வழங்கப்பட்டு வருவதை மேலும் சில நூறுகள் அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
News December 19, 2025
ஜியோ யூசர்களுக்கு புதிய CALLER ID சேவை

Truecaller போன்ற CNAP (Caller Name Presentation) என்ற காலர் ஐடி சேவையை ஜியோ விரைவில் தொடங்கவுள்ளது. தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அந்த எண்ணின் சிம் கார்டு யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ (ஆதார்/ KYC ஆவணங்கள் அடிப்படையில்) அந்த பெயர் திரையில் தோன்றும். இதன்மூலம் அழைப்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஸ்பேம், மோசடிகளை கட்டுப்படுத்த இச்சேவை பயனுள்ளதாக இருக்கும்.
News December 19, 2025
எத்தனால் கலந்த பெட்ரோலால் பாதிப்பில்லை: மத்திய அரசு

20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால், வாகனங்களுக்கு பாதிப்பில்லை என்பது ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ராஜ்யசபாவில், இது பற்றிய MP கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பழைய வாகனங்களில் கூட, செயல்திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், வாகனங்களின் மைலேஜுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கண்டறியப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.


