News April 22, 2025
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News December 15, 2025
நடிகர் ரெய்னர் மனைவியுடன் சடலமாக மீட்பு!

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ராப் ரெய்னர் (78), அவரது மனைவி மிச்செல் சிங்கர் ரெய்னர் (68) கொலை செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அவர்களது வீட்டில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளனர். கொலைக்கு அவர்களது மகனே காரணம் என சர்வதேச ஊடகங்கள் வெளியிடுகின்றன. நடிகராக 2 Emmy விருதுகளை வென்றுள்ள ராப், ‘When harry mets Sally’, ‘Misery’ போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார்.
News December 15, 2025
சோஷியல் மீடியாவில் ஆதார் போட்டோ போடுறீங்களா?

யாரும் சோஷியல் மீடியாவில் தங்களது ஆதார் அட்டையின் போட்டோவை பதிவிட வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. நிதி மோசடிகள், அடையாள திருட்டுகள் போன்றவற்றை தவிர்க்க, இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் Helpline 1930, UIDAI ஹெல்ப்லைன் 1947 அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம். SHARE IT.
News December 15, 2025
40 தொகுதிகளில் காங்., போட்டியா?

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.


