News April 22, 2025

டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

image

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Similar News

News December 31, 2025

போதைப்பொருள் விற்பவர்கள் ஏன் கைதாகவில்லை? ஆதவ்

image

TN-ல் பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே போதைப்பழக்கம் அதிகரித்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைபொருள் பயன்படுத்துபவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், அதை விற்பவர்கள் யார் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாதா, CM-க்கு தெரியாதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். மதுபான விற்பனையில் கவனம் செலுத்தும் அரசு போதையால் வரும் பாதிப்புகளை தடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.

News December 31, 2025

BREAKING: 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

image

தமிழக மக்கள் மிக மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடும் போட்டி என்றால், ஜல்லிக்கட்டுதான். இந்நிலையில், 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.3-ம் தேதி புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

News December 31, 2025

எவ்வளவு குடிச்சா போலீஸ்கிட்ட மாட்டாம தப்பிக்கலாம்?

image

ஒரு பீர் அடிச்சா போலீஸ் பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் நபரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, உங்க உடம்புல கொஞ்சமா ஆல்கஹால் கலந்தாலும் போலீஸ் சோதனையில்(Alcohol reading metre) நிச்சயம் தெரிந்துவிடும். போலீஸ் வைத்துள்ள மெஷினில் 35 புள்ளிகள் காட்டினால் நீங்கள் மது அருந்தியவர் என்பதை அவர்கள் உறுதி செய்துவிடுவர். எனவே மது ஒரு சொட்டு குடித்தாலும் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதே சிறந்தது..

error: Content is protected !!