News April 22, 2025
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பு: அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச அனுமதிக்காததால் அதிமுக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து இபிஎஸ் பேச எழுந்தபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. அப்போது என்ன பயமா? என இபிஎஸ் கேட்ட நிலையில், யாருக்கும் பயமில்லை என சபாநாயகர் பதிலளித்தார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News November 28, 2025
BREAKING: வேகமாக நெருங்கும் புயல்.. கனமழை வெளுக்கும்

நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே <<18409565>>NDRF குழுக்கள்<<>> டெல்டாவுக்கு விரைந்துள்ளன. மேலும், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் மணிக்கு 7 KM வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது.
News November 28, 2025
UAN லாக் இன் செய்யாமல் PF பேலன்ஸ் செக் பண்ணனுமா?

‘9966044425′ என்ற எண்ணிற்கு, PF கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் கொடுத்தால், PF பேலன்ஸ் தொகை SMS-ல் வந்துவிடும். அதேபோல், ‘7738299899′ என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN ENG’ என டைப் செய்து SMS அனுப்பினாலும், PF பேலன்ஸ் தொகையை பார்க்கலாம். இதற்கு உங்கள் UAN ஆக்டிவாகவும், KYC அப்டேட்டும் செய்திருப்பது அவசியம். ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
நெருங்கும் புயல்.. டெல்டாவுக்கு விரைந்த NDRF வீரர்கள்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களுக்கு 8 NDRF குழுவினர் விரைந்துள்ளனர்.


