News July 25, 2024

செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு

image

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கை உடனே விசாரிக்கவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

Similar News

News March 27, 2026

BREAKING: டாஸ்மாக் 4 நாள்கள் விடுமுறை

image

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,TN முழுவதும் 4 நாள்கள் டாஸ்மாக் இயங்காது என்று ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21,22 மற்றும் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும், டாஸ்மாக், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News March 27, 2026

Anna University-ல் மீண்டும் ஒரு பூகம்பம்..

image

அண்ணா பல்கலையில் பேராசிரியர் ஒருவர் 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி ஒருவர் சென்னை கமிஷ்னரிடம் புகாரளித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாசமான மெசேஜ்களை பேராசிரியர் அனுப்புவதாகவும், இதை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என அவர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல மாணவிகளை பேராசிரியர் ஞானவேல் பாபு இப்படி செய்ததாக புகார் எழுந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News March 27, 2026

ஐஜேகே வேட்பாளர்களை அறிவித்தார் பாரிவேந்தர்

image

அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன், குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தான் போட்டியிடவில்லை என்று பாரிவேந்தர் கூறியுள்ளார்.

error: Content is protected !!