News August 15, 2024

BAN Vs PAK போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

image

BAN Vs PAK அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வரும் 30ஆம் தேதி கராச்சியில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்காக கேலரிகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் இன்றி போட்டி நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Similar News

News December 3, 2025

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

image

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.

News December 3, 2025

11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்துக்கு பதில் கிடைக்குமா?

image

2014-ல் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்ற MH370 விமானம் மாயமானது. அதில் பயணித்தவர்களின் நிலையும் தெரியாததால், தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் விமானம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் 2017-ல் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், விமானத்தை மீண்டும் தேட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. டிச.30-ல் தொடங்கும் இப்பணி, 55 நாள்களுக்கு நடக்கவுள்ளது.

News December 3, 2025

ஒரே இடத்தில் புயல் சின்னம்… பேய் மழை வெளுத்து வாங்கும்

image

இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

error: Content is protected !!