News August 15, 2024
BAN Vs PAK போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

BAN Vs PAK அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வரும் 30ஆம் தேதி கராச்சியில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்காக கேலரிகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் இன்றி போட்டி நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Similar News
News October 14, 2025
உங்களுக்கு தீபாவளி பரிசு கிடைச்சுதா?

GST-யில் மாற்றம் செய்து தீபாவளி பரிசு என அறிவித்த PM மோடி, இந்த வரிக் குறைப்பால் மக்களுக்கு பணம் மிச்சமாகும் எனக் கூறியிருந்தார். தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பெரும்பாலானோர் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருள்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கியிருப்பீர்கள். வரிக் குறைப்பால், இந்த தீபாவளி ஷாப்பிங்கில் உங்க கிட்ட எவ்வளவு பணம் மிச்சமாச்சு? கமெண்ட்டில் சொல்லுங்க.
News October 14, 2025
டிராவில் முடிந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் 0-2 என்று பின்தங்கி இருந்த இந்தியா பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்து கோல்களை அடித்தது. இதனால் 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையும் பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் மேலும் ஒரு கோலை அடித்து சமன் செய்தது. புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
News October 14, 2025
முதலீடுகளை ஈர்ப்பதில் ஏமாற்றும் திமுக: அன்புமணி

முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை தமிழக அரசு வழங்கி வருவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் ₹15,000 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறும் நிலையில், அதனை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். அதனால் திமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.